தலைப்புச் செய்திகள்

6/recent/ticker-posts

Header Ads Widget

மேய்ந்த கோழி கிணற்றில் வீழ்ந்ததால் மோதல்-போத்தலால் குத்ப்பட்டு ஒருவர் காயம்!

மேய்ந்துகொண்டிருந்த கோழி ஒன்று கிணற்றில் வீழ்ந்ததையடுத்து  இரு வீட்டாருக்கிடையில் ஏற்பட்ட மோதலில்  ஒருவரை போத்தலால் குத்தியதாகக் கூறப்படும்  நபரை அளுத்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அப்போது கைது செய்யப்பட்டவர் பெனிபெத்திகொட, கம்வத்தகொட பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடையவராவார்.

காயமடைந்தவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவரது குடும்பமும் காயமடைந்தவரின் குடும்பமும் ஒரே கிணற்றை பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில்,  இரண்டு நாட்களுக்கு முன்னர் கோழி ஒன்று கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்ததால் அதனை யார் வெளியே எடுத்து கிணற்றைச்  சுத்தம் செய்வது என்பது தொடர்பில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு இரு தரப்பினருக்குமிடையே  மோதலாக மாறி இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அளுத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.